திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புதுமாவிலங்கை சாலை, சமுதாய கூடம் இடையே வயல்களின் வழியாக வண்டிப்பாதை செல்கிறது. இதன் வழியாக விவசாயிகள் தங்களது நிலத்திற்கு இடுபொருட்கள் கொண்டு செல்வது வழக்கம்.
இதுகுறித்து, பலமுறை மாவட்ட கலெக்டரிடமும், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திலும் மனுக்கள் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். வருவாய் அதிகாரிகளும் இடத்தை பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆனால் முறையாக தார்ச்சாலை அமைக்கவில்லை. இதனால், சிலர் வண்டிபாதையை மீண்டும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், விவசாய நிலங்களுக்கு இடுபொருட்கள் கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, புதுமாவிலங்கை முதல் சத்தரை வரை வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.